சினிமா செய்திகள்

விஜய்

மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் நடிகர் விஜய்

Published On 2022-12-13 10:05 GMT   |   Update On 2022-12-13 10:05 GMT
  • நடிகர் விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.
  • இவர் இன்று மீண்டும் இயக்க நிர்வாகிகளையும் ரசிகர்களையும் சந்திக்க இருக்கிறார்.

நடிகர் விஜய் சென்னையில் இன்று ரசிகர்களைச் சந்தித்துப் பேசுகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். மக்கள் தேவைகளை வீடு தேடிச்சென்று விசாரித்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூட்டத்தின் இறுதியில் அறிவுறுத்தப்பட்டது.


விஜய்

இதன் அடிப்படையில் பொறுப்பாளர்களின் செயல்பாடுகள் தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு இணையாக தங்கள் மன்ற நிர்வாகிகளை மக்கள் பணிகளில் ஈடுபட வைக்க பல்வேறு திட்ட வடிவங்கள் நிர்வாகிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைப்பின்பற்றி பொறுப்பாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.


விஜய்

இந்த நிலையில் இன்று விஜய் மீண்டும் இயக்க நிர்வாகிகளையும் ரசிகர்களையும் சந்திக்க இருக்கிறார். இந்த முறை அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துப்பேச இருக்கிறார். இதற்காகக் காலையிலிருந்தே பனையூர் விஜய் மக்கள் இயக்க தலைமையகத்தில் ரசிகர்கள் கூடியிருக்கிறார்கள். அனைவருக்கும் மதிய உணவாகச் சூடான பிரியாணி சமைக்க அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழக்கம்போல் பிற்பகலில் விஜய் நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள இருக்கிறார். கடந்த முறை பனையூர் பிரியாணி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News