சினிமா செய்திகள்

லட்சுமி பிரியா சந்திரமெளலி

null

நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு 'யாமா' படக்குழு வாழ்த்து

Published On 2022-07-27 11:38 GMT   |   Update On 2022-07-27 12:19 GMT
  • 68-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
  • நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால் தேசிய விருது அறிவிப்புகள் தள்ளிப்போனது. இதையடுத்து, 68-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இயக்குனர் வசந்த் இயக்கத்தில் உருவான ஆந்தாலஜி படமான 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், லட்சுமி பிரியா சந்திரமெளலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் 'யாமா' திரைப்பட குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


லட்சுமி பிரியா சந்திரமெளலி

இது குறித்து 'யாமா' படக்குழு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தனது மாறுபட்ட நடிப்பாலும், அழுத்தமான கதாபாத்திரங்கள் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வரும் லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதை 'யாமா' படக்குழு கொண்டாடி மகிழ்கிறது.

இந்த அங்கீகாரத்திற்கு மிக பொருத்தமானவரான லட்சுமி பிரியா சந்திரமெளலி, இதுபோன்ற பல உயரிய விருதுகளை வென்று சிறந்த நடிகைக்கான பல உச்சங்களை தொடுவார், என்று வாழ்த்துகிறோம்." இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News