கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கு வந்த சோதனை- அப்ரிடியை தொடர்ந்து மற்றொரு வீரருக்கு காயம்

Published On 2022-08-26 07:00 GMT   |   Update On 2022-08-26 07:00 GMT
  • ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி காயம் காரணமாக விலகினார்.
  • ஆசியக் கோப்பையைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் ஏழு டி20 போட்டிகளில் இங்கிலாந்துடன் விளையாடுகிறது.

இந்தியா இலங்கை பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை துபாயில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் மோதுகின்றனர்.

நாளை முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இரண்டாவது போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

இந்நிலையில் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அப்ரிடி காயம் காரணமாக விலகினார். இதை தொடர்ந்து மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகி உள்ளார்.

வேகப்பந்து வீச்சாளரான முகமது வாசிம் முதுகுவலி காரணமாக துபாயில் பயிற்சியிலிருந்து வெளியேறினார். ஆகஸ்ட் 28 அன்று இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடக்க ஆட்டத்தில் இவர் விளையாடுவது சந்தேகம் என தகவல் வந்துள்ளது.

வாசிம் ஐசிசி அகாடமியில் பந்துவீசும்போது முதுகுவலி இருப்பதாக தெரிவித்தார். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

முகம்து வாசிம் கடந்த ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அறிமுகமானதில் இருந்து 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 15.88 சராசரியில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

அப்ரிடி நான்கு வாரங்களாக காயம் இருந்தபோதிலும் பயணக் குழுவில் உறுப்பினராக உள்ளார். மேலும் அவர் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுற்றுப்பயணத்தில் மறுவாழ்வு பெற்று வருகிறார். பாகிஸ்தான் அவரை டி20 உலகக்கோப்பைக்குத் தயார்படுத்த முயற்சிக்கிறது.

ஆசியக் கோப்பையைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் ஏழு டி20 போட்டிகளில் இங்கிலாந்துடன் விளையாடுகிறது.

Tags:    

Similar News