கிரிக்கெட்

இலங்கை பயிற்சியாளர் சில்வர்வுட் ராஜினாமா

Published On 2024-06-28 01:56 GMT   |   Update On 2024-06-28 01:56 GMT
  • கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
  • அவரது பயிற்சியின் கீழ் இலங்கை அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

கொழும்பு:

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி ஒரு வெற்றி, இரு தோல்வி, ஒரு முடிவில்லை என 3 புள்ளிகள் மட்டுமே பெற்று லீக் சுற்றுடன் நடையை கட்டியது.

உலகக்கோப்பையில் இலங்கையின் மோசமான செயல்பாடு இதுவாகும். இந்த நிலையில் தோல்வி எதிரொலியாக இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் (இங்கிலாந்து) நேற்று பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் இலங்கை அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது. மற்றபடி பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

Tags:    

Similar News