கிரிக்கெட்

வதந்தி உண்மையானது: மனைவியை பிரிந்தார் ஹர்திக் பாண்ட்யா

Published On 2024-07-18 16:24 GMT   |   Update On 2024-07-18 16:24 GMT
  • ஹர்திக் பாண்ட்யா- நட்டாசாவுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
  • கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் பிரிய இருப்பதாக தகவல் வெளியானது.

செர்பியா நாட்டைச் சேர்ந்த நட்டாசாவை இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யா கடந்த நான்கு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையில் கருத்த வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இருவரும் அது குறித்து வெளிப்படையாக கருத்து ஏதும் கூறாமல் இருந்தனர்.

உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில், ஹர்திக் பாண்ட்யா வெற்றி கொண்டாட்டத்தில் இருந்தபோது நட்டாசா தனது குழந்தையுடன் செர்பியா சென்றார். இதனால் வதந்தி ஏறக்குறைய உண்யைமானது.

இந்த நிலையில் பிரிந்து வாழ்வதற்கு இருவரும் பரஸ்பர முடிவு எடுத்துள்ளனர். இந்த தகவலை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இருவரும் பிரிய வாய்ப்புள்ளது என பரவி வந்த வதந்தி தற்போது உண்மையாகியுள்ளது.

Tags:    

Similar News