கிரிக்கெட் (Cricket)

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு

Published On 2024-07-06 10:41 GMT   |   Update On 2024-07-06 10:45 GMT
  • ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஹராரே:

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் வி.வி.எஸ்.லட்சுமண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

அபிஷேக் சர்மா, துருவ் ஜூரல் மற்றும் ரியான் பராக் ஆகியோர் இன்று அறிமுகமாகின்றனர்.

Tags:    

Similar News