வழிபாடு

ஐஸ்வர்யம் தரும் சங்கு தீபம்

Published On 2024-10-16 02:56 GMT   |   Update On 2024-10-16 02:56 GMT
  • தீபவழிபாட்டிற்கு, வலம்புரிச் சங்கு சிறந்ததாக கருதப்படுகிறது.
  • சங்கில் ஏற்றும் தீபம் மகாலட்சுமி தாயாரை வீட்டிற்கு வரவழைக்கும்.

சங்கு தீபவழிபாட்டிற்கு, வலம்புரிச் சங்கு சிறந்ததாக கருதப்படுகிறது. அதே நேரம் இடம்புரி சங்கை வைத்தும் சங்கு தீபத்தை ஏற்றலாம். இந்த சங்கில் ஏற்றும் தீபம் தான் மகாலட்சுமி தாயாரை நம் வீட்டிற்கு வரவழைக்கும்.

கேரளாவில் உள்ள பல நாராயணர் கோவில்களில், சங்கில் தீபம் ஏற்றும் வழக்கம் காணப்படுகிறது. சங்கில் தீபம் ஏற்றுவது மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவின் அருளை ஒருசேரப் பெற்றுத்தருகிறது.


தரமான நல்ல சங்கை வாங்கிய பிறகு, நம் வீட்டிற்கு கொண்டு வந்து தண்ணீர் ஊற்றி சங்கை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சங்கிற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து, ஒரு பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி அதன் மேல் சங்கை வைக்க வேண்டும்.

மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றுபவர்கள், சங்கினுள் பசுநெய்விட்டு தீபம் ஏற்ற வேண்டும். நாராயணனுக்கு விளக்கு ஏற்றுபவர்கள், சங்கினுள் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். உருக்கிய பசுநெய்யும். நல்லெண்ணெயும் சரி பாதியாகக் கலந்து சங்கில் விட்டு தீபம் ஏற்றினால், லட்சுமிக்கும் நாராயணனுக் கும் பூஜை செய்த பலன் கிடைக்கும்.


இந்த சங்கு தீபத்தை நம் வீட்டின் தெய்வ ஆற்றல் மிகுந்த ஈசானிய மூலையில் வைத்து ஏற்ற வேண்டும். தீபம் எரியும் திசை தென்மேற்கு நோக்கியவாறு இருக்க வேண்டும். சங்கு தீபத்தை முதன் முதலாக ஏற்றும்போது, அந்த நாள் சுக்ர ஓரையில் ஏற்றுவது விசேஷமான பலனைத் தரும் என்கிறார்கள்.

குறைந்தது அரை மணிநேரம் சங்கு தீபம் எரிவது சிறப்பு. சங்கு தீபம் ஏற்ற தொடங்கிய நாளில் இருந்து 41 நாட்களுக்கு தொடர்ந்து ஏற்றி வழிபாடு செய்வது மிகவும் அவசியம். பெண்கள் மாதவிலக்கு நாளில் வீட்டில் உள்ள வேறு ஒருவர் அந்த தீபத்தை ஏற்றலாம்.

இவ்வாறு தொடர்ந்து 41 நாட்கள் சங்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால், பொருளாதார பிரச்சனைகள் தீரும். பணவரவு அதிகரிக்கும். இடர்பாடுகள் அனைத்தும் அகலும், வீட்டில் ஐஸ்வரியம் குடிகொள்ளும்.

Tags:    

Similar News