வழிபாடு

ஆரல்வாய்மொழி வவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் மலர் முழுக்கு விழா

Published On 2022-07-16 07:54 GMT   |   Update On 2022-07-16 07:54 GMT
  • பாலமுருகனுக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
  • பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய வவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் மலர் முழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்தபடி தெக்கத்தியான் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பாலமுருகன் கோவிலை சென்றடைந்தனர். பின்னர் பாலமுருகனுக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 8 மணிக்கு பாலமுருகனுக்கு மலர் முழுக்கும் நடைபெற்றது. முன்னதாக மேலும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இன்று அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை தலைவர் சண்முகபெருமாள் மற்றும் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News