வழிபாடு

செவ்வாய் கிழமை இதை செய்யுங்கள்...

Published On 2024-07-01 15:14 GMT   |   Update On 2024-07-01 15:14 GMT
  • இந்த தினத்தில் எந்த ஒரு சுபகாரியங்கள் மேற்கொண்டாலும் அது மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
  • நோயினால் அவதிப்படுபவர்கள் செவ்வாய் ஓரையில் வைத்தியம் மேற்கொண்டால் விரைவிலேயே நோயிலிருந்து விடுபடுவீர்கள்.

திங்கள், புதன், வெள்ளி போன்ற நாட்களை நல்ல காரியங்கள் செய்வதற்கு உகந்த நாட்களாக பலரும் கருதுகின்றனர். ஆனால் செவ்வாய்க் கிழமையை எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கும் ஏற்ற தினமாக எவரும் பார்ப்பதில்லை. உண்மையில் செவ்வாய் கிழமைக்கு எந்த ஒரு மகிமையும் இல்லையா? இதுகுறித்து நமது ஆன்மிகம் கூறுவது என்ன? செவ்வாய்க்கிழமையில் நாம் எதை எல்லாம் செய்து என்னென்ன பலன்களை அடையலாம்? இப்படி பல தகவலைகளை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

நவகிரகங்களுக்குள் மிகச்சிறந்தது செவ்வாய் கிரகமாகும். செவ்வாய் கிரகத்திற்கு மங்கள காரகன் என்ற சிறப்பு பெயர் உண்டு. செவ்வாய் என்றாலே மங்கலமான நாள் என்று நம் முன்னோர்கள் கூறுவதுண்டு. செவ்வாய்க்கிழமையன்று எந்த ஒரு காரியத்தையும் செய்ய விரும்பாதவர்கள் வாழ்க்கையில் முழு பலனையும் அடைய முடியாது என்றும் சொல்வார்கள்.


முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையில் தான் மௌன அங்காரக விரதம் ஒன்று பின்பற்றப்படுகிறது. தர்ம சாஸ்திரத்தில் இதை பற்றி மிகவும் சிறப்பாக விரிவாக கூறப்பட்டுள்ளது. ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று மௌன விரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை அடைய முடியும் என்று சொல்லப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு விவாதத்திலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்றால் அது அவர்களுக்கு பெரிய பிரச்சனையாகவே மாறிவிடும்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கடன் பிரச்சனை உள்ளவர்கள் போன்றோர் செவ்வாயன்று விரதம் மேற்கொண்டு முருகனை பூஜை செய்தால் தோஷம் நீங்கும். அவர்களின் கடன் சுமையும் விரைவாகவே தீர்ந்துவிடும். அதேபோல் மங்களகரமான பொருட்கள் வாங்குவதற்கும், மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் செய்வதற்கும் செவ்வாய்க்கிழமை ஏற்ற தினமாகும். இந்த தினத்தில் எந்த ஒரு சுபகாரியங்கள் மேற்கொண்டாலும் அது மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.

கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் செவ்வாய் ஓரையில் சிறிது சிறிதாக கடனை திருப்பிக் கொடுத்து வர உங்களது கடன் விரைவில் அடைந்து அந்தப் பிரச்சினையில் இருந்து விரைவாக வெளிவர முடியும். ஏதேனும் நோயினால் அவதிப்படுபவர்கள் செவ்வாய் ஓரையில் வைத்தியம் மேற்கொண்டால் விரைவிலேயே நோயிலிருந்து விடுபடுவீர்கள்.

முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை அன்று முருகன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வந்தால் நோய் நொடியில்லாமல் நிறைவான செல்வங்கள் பெற்று இனிமையான வாழ்வினை அடைய முருகப் பெருமான் திருவருள் புரிவார். அதிலும் செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் இதனை தொடர்ந்து செய்ய அவர்களுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும்.

Tags:    

Similar News