வழிபாடு

ஆங்கில புத்தாண்டு: திருச்செந்தூர் கோவிலில் நாளை நடை திறப்பு நேரம் மாற்றம்

Published On 2022-12-31 08:26 GMT   |   Update On 2022-12-31 08:26 GMT
  • ஆருத்ரா தரிசனம் அன்று (6-ந்தேதி) கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படுகிறது.
  • தை பொங்கல் அன்று (15-ந்தேதி) கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடை திறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை வழக்கமாக காலை 5 மணிக்கு திறக்கப்படும். தமிழ் மாதமான மார்கழி கடந்த 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் ஜனவரி 14-ந் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடைபெற்று வருகிறது. பின்னர் மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

இந்நிலையில் நாளை (1-ந் தேதி) ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம் காலை 9மணிக்கு உச்சிகால அபிசேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

இதே போல் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வருகிற 6-ந் தேதி(வெள்ளிக்கிழமை) கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அதேபோல் தை பொங்கல் தினத்தன்று (15-ந் தேதி) கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.

மேலும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில் கடற்கரை முழுவதும் நாளை போலீசார் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Tags:    

Similar News