வழிபாடு

மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவிலில் பிரம்மோற்சவ நிகழ்ச்சி

Published On 2023-03-30 06:53 GMT   |   Update On 2023-03-30 06:53 GMT
  • பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
  • பூத வாகனத்தில் நடராஜர் கைலாய வாத்திய பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது.

மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 3-வது நாள் நிகழ்ச்சியாக பூத வாகனத்தில் நடராஜர் கைலாய வாத்திய பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மீஞ்சூர் வட்டார நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர். மீஞ்சூர் வட்டார நாடார் சங்க தலைவர் அன்பழகன், செயலாளர் லிங்கராஜ், பொருளாளர் சிவசுப்பிரமணியம், துணை தலைவர் முனுசாமி, துணை செயலாளர் ஆனந்த சங்கர், பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் கனகராஜ், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் கணேஷ், துணை தலைவர் ராஜ், துணை செயலாளர்கள் சதீஷ், முருகன், பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News