வழிபாடு

காஞ்சீபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் பொய்கையாழ்வார் உற்சவம்

Published On 2022-10-28 07:16 GMT   |   Update On 2022-10-28 07:16 GMT
  • வருகிற 1-ந்தேதி வரை உற்சவம் நடைபெறுகிறது.
  • தினமும் காலையில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்து வருகிறது.

காஞ்சீபுரம் ஸ்ரீயதோக் தகாரி பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஸ்ரீ பொய்கை ஆழ்வார் அவதார உற்சவம் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. வருகிற 1-ந்தேதி வரை உற்சவம் நடைபெறுகிறது.

இந்த விழாவையொட்டி தினமும் காலையில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்து வருகிறது. மாலையில் சுவாமி மற்றும் பொய்கை ஆழ்வார் வீதி உலா நடை பெறுகிறது. அதேபோல் நேற்று மாலையிலும் சுவாமி மற்றும் பொய்கையாழ்வார் வீதி உலா நடைபெற்றது.

வருகிற 1-ந்தேதி பொய்கை ஆழ்வாருக்கு காலையில் மங்களா சாசனம், பல்லக்கு உற்சவம் ஆகியவை நடக்கிறது. மாலையில் திருமஞ்சனமும், இரவு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

Tags:    

Similar News