வழிபாடு

சிக்கல் சிங்காரவேலவர் பற்றிய அரிய தகவல்கள்

Published On 2023-07-05 10:01 GMT   |   Update On 2023-07-05 10:01 GMT
  • அரோகரா அரோகரா சிக்கல் சிங்காரவேலவனுக்கு அரோகரா.
  • யானை ஏற முடியாத மாடக்கோவிலுள் இதுவும் ஒன்று.

1. மூலவரே உற்சவராக வருவது சிறப்பு.

2. அற்புதமான வியர்வை காட்சி..

3. அன்னை வேல் கொடுத்த தலம்..

4. 64 சக்தி பீடங்களில் அன்னை வேல்நெடுங்கண்ணி அருள்புரிய சிக்கலும் ஒன்று.

5. வெண்ணையால் செய்யப்பெற்று வசிஷ்டரால் பூஜை செய்யப்பட்ட ஸ்ரீ நவநீதேஸ்வரர் அருள்புரியக்கூ டிய தேவாரப்பாடல் பெற்ற தலம்.

6. யானை ஏற முடியாத மாடக்கோவிலுள் இதுவும் ஒன்று.

7. சைவமும் வைணவமும் இணைந்து உள்ள திருக்கோவில் (ஸ்ரீ கோலவாமனப் பெருமாள் இங்கு உள்ளார்).

8. காமதேனுவின் சாபம் நீங்கிய தலம்.

9. மல்லிகையை தலவிருட்சமாய் கொண்டு மல்லிகாரண்யம் எனும் சிறப்பு பெற்ற தலம்.

10. வாமன அவதாரம் எடுக்க பெருமாள் சங்கல்பம் செய்த தலம்.

11. இவ்வாலய முருகனின் மூலவர்க்கு தனிப்பெரிய ஆலயமே உள்ளது (இக்கோவிலிருந்து அரை கிலோமீட்டரில் உள்ள பொருள்வைத்தச்சேரி ஸ்ரீ கந்தசாமி இவரே இத்திருத்தல முலவராக கருதப்படுகிறார்.

12. இன்னும் சொல்ல ஆயிரம் இருக்க. வாருங்கள் கலியுகக் கடவுளாம் சிக்கல் சிங்காரவேலரை காண...அவன் பெருமையை நேரில் கண்டுனர அரோகரா அரோகரா சிக்கல் சிங்காரவேலவனுக்கு அரோகரா.

Tags:    

Similar News