ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் காளிங்க நர்த்தனக் காட்சி.
- திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-29 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை நள்ளிரவு 1.13 மணி வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: பூராடம் காலை 10.39 மணி வரை. பிறகு உத்திராடம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீகூடலழகர், திருமொகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் தலங்களில் திருமொழித் திருநாள் தொடக்கம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் காளிங்க நர்த்தனக் காட்சி. வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி தெப்பத்தில் பவனி. திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-முயற்சி
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-புகழ்
கடகம்- வரவு
சிம்மம்- சுபம்
கன்னி- உறுதி
துலாம்- ஈகை
விருச்சிகம்- பெருமை
தனுசு- பொறுப்பு
மகரம்- மாற்றம்
கும்பம்- சாந்தம்
மீனம்- அன்பு