ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- குடந்தை ஸ்ரீ சாரங்கபாணி திருமொழித் திருநாள் தொடக்கம்.
- ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் முதலமைச்சர் திருக்கோலமாய்க் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-3 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி மாலை 4.16 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: பூரட்டாதி பின்னிரவு 3.10 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம்: மரண, அமிர்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சிதம்பரம் சிவபெருமான் காலை சந்திர பிரபையிலும், இரவு அன்ன வாகனத்திலும் புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பர் பவனி. குடந்தை ஸ்ரீ சாரங்கபாணி திருமொழித் திருநாள் தொடக்கம். ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் முதலமைச்சர் திருக்கோலமாய்க் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பகாசுரவதம் திருக்கோலமாய் காட்சி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்த கோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சாந்தி
ரிஷபம்-பரிவு
மிதுனம்-புகழ்
கடகம்-அமைதி
சிம்மம்-பக்தி
கன்னி-திடம்
துலாம்- பயணம்
விருச்சிகம்-போட்டி
தனுசு- பொறுமை
மகரம்-உதவி
கும்பம்-பாராட்டு
மீனம்-வரவு