ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவில்களில் திருவாய் மொழி உற்சவம்.
- கந்தகோட்டம் முருகப்பெருமான் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-8 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவாதசி காலை 7.13 மணி வரை பிறகு திரயோதசி நாளை விடியற்காலை 5.25 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: கார்த்திகை இரவு 10.14 மணி வரை பிறகு ரோகிணி
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று கார்த்திகை விரதம். பிரதோஷம். சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். குடந்தை ஸ்ரீசாரங்கபாணி, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவில்களில் திருவாய் மொழி உற்சவம். திருப்பதி நவநிதி மகாதீர்த்தம். நாச்சியார்கோவில் ஸ்ரீஎம்பெருமான் தெப்ப உற்சவம். சென்னை கந்தகோட்டம் முருகப்பெருமான் சிறப்பு அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி-அம்பாள் விருஷபாரூடராய் காட்சியருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-ஓய்வு
மிதுனம்-ஆசை
கடகம்-வெற்றி
சிம்மம்-தனம்
கன்னி-புகழ்
துலாம்- தாமதம்
விருச்சிகம்-செலவு
தனுசு- வரவு
மகரம்-அன்பு
கும்பம்-லாபம்
மீனம்-திறமை