ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 8 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி நண்பகல் 1.11 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: திருவாதிரை பிற்பகல் 3.13 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். நத்தம் மாரியம்மன் பாற்குடக்காட்சி. கோவை கோணியம்மன் உற்சவம் ஆரம்பம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-பண்பு
மிதுனம்-பெருமை
கடகம்-சுகம்
சிம்மம்-மேன்மை
கன்னி-தேர்ச்சி
துலாம்- வரவு
விருச்சிகம்-தேர்வு
தனுசு- பரிசு
மகரம்-மாற்றம்
கும்பம்-அனுகூலம்
மீனம்-இன்பம்