வழிபாடு

சிவனின் சின்னங்கள்!

Published On 2024-06-28 02:35 GMT   |   Update On 2024-06-28 02:35 GMT
  • ருத்ராட்சங்கள் மனத் தூய்மையைக் குறிக்கின்றன.
  • மூன்றாவது கண், தீமை மற்றும் அறியாமையின் அழிவைக் குறிக்கிறது.

* ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு, வேத போதனைகளின் ஓட்டத்தை கடத்துவதை கங்கை குறிக்கிறது.

* இறைவன் காலமற்றவன் என்பதை பிறை சந்திரன் அடையாளப்படுத்துகிறது.

* மூன்றாவது கண், தீமை மற்றும் அறியாமையின் அழிவை குறிக்கிறது. அக்கண் திறந்தால் தீமை பொசுங்கிப்போகும்.

* சிவபெருமான் வைக்கும் வாழ்க்கை தேர்வில் வெற்றிபெற்றால், அவர் உடலை ஆபரணமாக அலங்கரிக்கலாம் என்பதை பாம்பு பறைசாற்றுகிறது.

* ருத்ராட்சங்கள் மனத் தூய்மையைக் குறிக்கின்றன.

* திரிசூலத்தின் மூன்று கூர்மையான பகுதிகளும், அறிவு, ஆசை, செயல்படுதல் ஆகியவற்றை குறிக்கின்றன.

* உடுக்கையும், அதில் இருந்து புறப்படும் ஒலியும், வேதங்களையும் அவற்றின் சொற்களையும் குறிப்பிடுகின்றன.

* ஈசன் உடுத்தியிருக்கும் புலித்தோல் ஆடையானது, அச்சமின்மையை எடுத்துரைக்கிறது.

Tags:    

Similar News