வழிபாடு

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் சண்டி யாகம்

Published On 2022-11-04 04:48 GMT   |   Update On 2022-11-04 04:48 GMT
  • சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
  • சண்டியாகம் வருகிற 11-ந்தேதி வரை நடக்கிறது.

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று காமாட்சி ஹோமம் எனப்படும் சண்டியாகம் தொடங்கியது. நேற்று காலை யாக சாலையில் உற்சவர் காமாட்சி தாயாரை எழுந்தருள செய்தனர். தாயார் முன்னிலையில் சிறப்புப்பூஜைகள், நித்ய ஹோமம், சண்டிஹோமம், லகுபூர்ணாஹுதி, நிவேதனம் நடந்தது. சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

மாலை ஹோமம், சண்டிபாராயணம், சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சண்டியாகம் வருகிற 11-ந்தேதி வரை நடக்கிறது.

Tags:    

Similar News