வழிபாடு

குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம் இன்று

Published On 2024-02-21 02:30 GMT   |   Update On 2024-02-21 02:31 GMT
  • குலசேகர ஆழ்வார் நட்சத்திரம் புனர்பூசம்.
  • வைணவ மரபில் ராமனைப் பெருமாள் என்று அழைப்பது மரபு.

ஆழ்வார்கள் பன்னிருவரில் குலசேகர ஆழ்வார் மாசிமாதம் புனர்பூச நட்சத்திரத்தில், இன்றைய கேரளநாடு திருவஞ்சிக்களம் என்னும் ஊரில் அவதரித்தவர். குலசேகர ஆழ்வார் ராமாயணத்தில் ராமர் குணங்களில் கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என ஈடுபட்டவர். அவர் பாடிய பாசுரங்களின் தொகுப்பை நாதமுனிகள் பெருமாள் திருமொழி என்று தலைப்பிட்டு முதல் ஆயிரத்தில் சேர்த்தார். ராமருடைய அவதார நட்சத்திரம் புனர்பூசம். குலசேகர ஆழ்வார் நட்சத்திரம் புனர்பூசம்.

இருவருமே அரசகுடும்பத்தில் அவதரித்தவர்கள். தசரதனுக்கு வெகுகாலம் குழந்தை பேறு இன்றி தவமிருந்து, பெற்ற பிள்ளையாக ராமன் அவதரித்தது போலவே குலசேகர ஆழ்வாரின் தந்தைக்கும் பலகாலம் பிள்ளைப்பேறு இன்றி செல்லப் பிள்ளையாக குலசேகரர் அவதரித்தார்.

இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் `குலசேகரப் பெருமாள்' என்றே பெயர் வழங்கலாயிற்று.

வைணவ மரபில் ராமனைப் பெருமாள் என்று அழைப்பது மரபு. காரணம் அவருடைய குலதெய்வமாக திருவரங்கநாதன் விளங்கினார்.

பெருமாளான ராமன் வணங்கிய பெருமாள் என்பதால் திருவரங்கநாதனை பெரிய பெருமாள் என்று அழைப்பார்கள். வைணவ மரபில் குலசேகர ஆழ்வாரை குலசேகரப்பெருமாள் என்று அழைப்பதும், அவர் பாடிய பாசுரங்களின் தொகுப்பு பெருமாள் திருமொழி என்றும் அழைப்பார்கள்.

Tags:    

Similar News