வழிபாடு

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா 31-ந்தேதி தொடங்குகிறது

Published On 2023-05-13 08:14 GMT   |   Update On 2023-05-13 08:14 GMT
  • சிறப்பு பூஜையுடன் பந்தக்கால் நடப்பட்டது
  • கருடசேவை ஜூன் 2-ந் தேதி நடக்கிறது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவிருமான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக வைகாசி பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

30 அடி உயர பந்தக்காலுக்கு மஞ்சள், குங்குமம் மாவிலை தோரணம் கட்டி கோவில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க கற்பூர ஆரத்தி காட்டி பந்தக்கால் கள் நட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை தொடங்கி வைத்தனர்.

பிரம்மோற்சவ விழா வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய உற்சவங்களான கருடசேவை உற்சவம் ஜூன் மாதம் 2-ந் தேதியும், திருத்தேர் உற்சவம் ஜூன் மாதம் 6-ந் தேதியும், தீர்த்தவாரி உற்சவம் ஜூன் மாதம் 8-ந் தேதியும் என 10 நாள் உற்சவம் காலை, மாலை என இரு வேளையும் நடைபெறுகிறது.

உற்சவத்தில் காலை, மாலை என இரு வேளை களிலும் அம்ச வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், யாளி வாகனம், சந்திர பிரபை, சூரிய பிரபை, தங்க பல்லக்கு, தங்க சப்பரம், யானை வாகனம் உன்ளிட்ட வாகனங்களில் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் காஞ்சீபுரம் ராஜ வீதிகளில் வீதி உலா வர உள்ளார்.

Tags:    

Similar News