அழகுக் குறிப்புகள்

முடி கொட்டுதலை தடுக்க உதவும் சித்த மருத்துவம்

Published On 2024-06-28 08:46 GMT   |   Update On 2024-06-28 08:46 GMT
  • மயிர்கால்களை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும்.
  • முடி உதிர்தல் பிரச்சனையை அலட்சியம் செய்யக்கூடாது.

* கரிசாலை இலை, நெல்லி வற்றல், அதிமதுரம் சமமாக எடுத்து அரைத்துப் பூசி பின் குளித்து வரும் பழக்கத்தை மேற்கொண்டால் முடி கொட்டுதல் நிற்கும்.

* நிலாவரை இலையை அரைத்து முடி உதிரும் இடத்தில் தேய்க்கலாம்.

* துவரம் பருப்பை முதல் நாள் ஊற வைத்து மறுநாள் அதே நீரில் அரைத்து தலைக்கு பற்றுப்போட்டு சிறிது நேரம் கழித்து குளித்தால் முடி கொட்டுதல் நிற்கும்.

* சிறிய வெங்காயத்தை நன்கு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் முடி உதிர்தல் நிற்கும்.

* பேய்ப்புடல் சாறு எடுத்து தலையில் பூசி நன்கு ஊறிய பின் சீகைக்காய் போட்டுக் குளிக்க முடிஉதிர்தல் நிற்கும்.

* செம்பருத்திப் பூவை நன்கு அரைத்து வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து, ஊற வைத்த பயித்தம் மாவு போட்டுக் குளிக்க முடி உதிர்தல் நிற்கும்.

* தேங்காய்ப்பால், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து ஊற வைத்துக் குளிக்கவும்.

* பொன்னாங்கண்ணிச் சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, தேங்காய் எண்ணெய் சமமாக எடுத்து நீர் வற்றக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துவர முடி உதிர்தல் நிற்கும்.

* உலர்ந்த மருதாணி இலைப்பொடி 2 ஸ்பூன், எள்ளு 2 ஸ்பூன் அதிமதுரப் பொடி 2 ஸ்பூன், நெல்லி வற்றல் 2 ஸ்பூன் இவைகளைப் பால் விட்டு அரைத்து தண்ணீர் கலந்து பின் சூடாக்கி, இளஞ்சூட்டில் இறக்கித் தலையில் தேய்த்து வேர்க் கால்களில் படும்படி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்துக் குளிக்க முடி உதிர்தல் நிற்கும்

* கோழி முட்டையின் வெண்கருவில் வெங்காயத்தை நசுக்கிப் போட்டு தலையில் தேய்த்து ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்தல் நிற்கும்.

* மேலும் உடல் உஷ்ணம் மிகுந்தவர்கள் இரவில் நல்லெண்ணையை உள்ளங்காலில் தேய்த்து மசாஜ் செய்யவும்.

சத்துக் குறைவுள்ளவர்கள் பழங்கள், கீரைகள், தாவர எண்ணைய்கள், நெய், கொட்டைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் முடி கொட்டுவது நிற்கும்.

நாம் உண்ணும் உணவு நம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் அன்றாடம் உண்ணும் உணவு, நமது தோல் மற்றும் முடி பளபளப்பையும் பாதிக்கிறது.

ஒருவருக்கு முடி உதிர்கிறது என்றால், அது சாதாரண விஷயமல்ல. நம்முடைய தலைமுடி அளவுக்கு அதிகமாக உதிர்கிறது என்றால், நம் உடலில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதற்கான முதல்கட்ட அறிகுறியே முடி உதிர்தல். அதை நாம் எப்போதும் அலட்சியம் செய்யக்கூடாது.

ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமானதோ அதேபோல தான் தலைமுடிக்கு மயிர்கால்கள். உங்களுக்கு நீண்ட வலிமையான மற்றும் ஆரோக்கியமான தலைமுடி வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் மயிர்கால்களை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும்.

உங்களுடைய மயிர்கால்கள் வலுவிழந்து காணப்பட்டால் அது உங்களின் தலைமுடி வளர்ச்சியை பாதிக்கலாம். உங்கள் மயிர்க்கால்களை வலுப்படுத்துவதற்கு உங்களுடைய முடி பராமரிப்பு புராடக்டுகளில் அதிக கெமிக்கல்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

தலைமுடி ஆரோக்கியமாக வளர வேண்டுமானால், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ள உணவுகள் எடுக்க வேண்டும். இந்த ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து, வைட்டமின் சி, பி, இ போன்றவை இருக்கும்படியும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற கொட்டை வகைகளில் பல்வேறு விதமான அடிப்படையான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. இவற்றை நாள்தோறும் கையளவு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மட்டுமல்ல, தலை முடிக்கு பலம் சேர்க்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் தினமும் சாப்பிடும் ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிக்களை ஒதுக்கிவைத்துவிட்டு அதற்கு மாற்றாக மேற்கூறிய ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும்.

Tags:    

Similar News