பெண்கள் உலகம்

சினைப்பை குழாய் அடைப்பை நீக்க உதவும் சித்தமருத்துவம்

Published On 2024-08-11 03:03 GMT   |   Update On 2024-08-11 03:03 GMT
  • கருத்தரிப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
  • கருவுற்ற கருமுட்டை கர்ப்பப்பைக்கு செல்வதை தடுக்கும்.

சினைப்பைகளையும், கர்ப்பப்பையையும் இணைக்கும் பாலமாக சினைப்பாதைக் குழாய்கள் இருக்கின்றன. கருத்தரிப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

சினைப்பாதைக்குழாய் அடைப்பின் விளைவாக, சினைப்பாதையில் கருவுறுதல் நடைபெறாது. அல்லது கருவுறுதல் நடைபெற்றாலும் (குழாய் அடைப்பின் காரணமாக), கருவுற்ற கருமுட்டை கர்ப்பப்பைக்கு செல்வதை, சினைப்பாதைக் குழாயில் உள்ள அடைப்பு தடுக்கும். இதனால் சினைப்பாதைக் குழாயில் இடம்மாறிய கர்ப்பம் ஏற்படும்.

 சினைப்பாதைக் குழாய் அடைப்பின் அறிகுறிகள், அடைப்பின் காரணத்தைப் பொறுத்து இருக்கும். சினைப்பாதைக் குழாயில் திரவம் நிரம்பி இருந்தால் வயிற்றின் ஒரு பக்கத்தில் லேசான வலி ஏற்படலாம். சில பெண்களுக்கு அவ்வப்போதோ அல்லது மாதவிடாயின் போதோ இடுப்பு பகுதியில் வலி ஏற்படலாம்.

அடைபட்ட சினைப்பாதைக் குழாய்களை கண்டறிய பயன்படுத்தப்படும் பொதுவான சோதனை ஹிஸ்டெரோசால்பின்கோக்ராம் எனப்படும். இதில் ஒரு பாதுகாப்பான சாயம் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டு, சினைப்பாதைக் குழாய்களிலுள்ள அடைப்புகள் கண்டுபிடிக்கப்படும்.

சித்த மருத்துவத்தில் நோய்த்தொற்றுக்குரிய சிகிச்சைகள் மற்றும் சதையடைப்புக்குரிய சிகிச்சைகள் கொடுக்கப்படும். இதை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நோய்த்தொற்றுக்கு சேராங்கொட்டை நெய் 5 மில்லி லிட்டர் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும். சதையடைப்பு நீங்க மாவிலிங்கப்பட்டைச் சூரணம் 1 கிராம், வெடியுப்புச் சுண்ணம் 200 மில்லிகிராம், நண்டுக்கல் பற்பம் 200 மில்லிகிராம், குங்கிலிய பற்பம் 200 மில்லிகிராம் வீதம் மூன்று வேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும். இதை மருத்துவர் ஆலோசனையின் பேரில் உண்பதே நல்லது.

Tags:    

Similar News