பெண்கள் உலகம்

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன நடக்கும்?

Published On 2023-10-13 08:37 GMT   |   Update On 2023-10-13 08:37 GMT
  • ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
  • நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு.

நாம் உறக்கத்தில் கனவு காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. சிலர் கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம்தான் எனவும் கூறுகின்றனர். மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிபடுகின்றன எனவும் கூறுகின்றனர். கனவுகள் பெரும்பாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதே வருகின்றன. அப்படி இறந்தவர்களை நாம் கனவில் காணும் போது ஏற்படும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

* இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும். மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள்.

* இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசீர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லாவிதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.

* இறந்துபோன உங்கள் தாய் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ பெண் குழந்தைகள் பிறக்கப்போகிறது என்று அர்த்தம்.

* இறந்தவர்களுடன் பேசுவதுபோல் கனவு கண்டால் பேரும், புகழும் கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்.

* நமக்கு வேண்டப்பட்டவர்கள் யாராவது இறப்பது போல் கனவு கண்டால் துன்பங்கள் நம்மைவிட்டு விலகப்போகிறது என்று அர்த்தம்.

* இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவதுபோல் கனவுகண்டால் நல்லதல்ல. கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்துகொள்வது நல்லது.

* இறந்துபோனவர்களை (யாராக இருந்தாலும்) தூக்கி செல்வது போல கனவு வந்தால் நன்மை உண்டு.

* இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பதுபோல் கனவு கண்டால் எல்லாவிதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.

* இறந்துபோன தாய் மற்றும் தந்தையை கனவில் கண்டால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தார்கள் என்றுபொருள்.

* தான் இறந்துவிட்டதுபோல் கனவு வந்தால் நன்மைகளே ஏற்படும். வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட போகிறது என்று அர்த்தம்

Tags:    

Similar News