உள்ளூர் செய்திகள் (District)
பஸ் கண்ணாடிகளை உடைக்க திட்டம் தீட்டிய 2 பேர் கைது
- மேட்டூர் அருகே உள்ள மாதையன்கொட்டாய் மேல்வாய்க்கால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட் டனர்.
- பஸ் கண்ணாடிகளை உடைக்க லாம் என சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் போலீசார் நேற்று மாலை மேட்டூர் அருகே உள்ள மாதையன்கொட்டாய் மேல்வாய்க்கால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட் டனர். அப்போது மேட்டூர் பொன்நகரை சேர்ந்த அர்ஜூனன் மகன் மாதேஷ் (வயது 29), எடப்பாடி கலர்காட்டை சேர்ந்த கோபி மகன் தீபக்குமார் (22) ஆகியோர் பொதுமக்கள் தங்களை பார்த்து அச்சப்பட வேண்டும் என்பதற்காக பஸ் கண்ணாடிகளை உடைக்க லாம் என சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார், அவர்களால் பொது சொத்துக்கு பங்கம் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருவரை யும் போலீசார் கைது செய்தனர்.