உள்ளூர் செய்திகள் (District)

தங்க பதக்கம் வென்ற செஸ் வீரர்களுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

Published On 2024-09-23 07:02 GMT   |   Update On 2024-09-23 07:02 GMT
  • மகளிர் பிரிவில் அசர்பைஜான் அணியை 3.5 க்கு 0.5 என்ற கணக்கில் இந்தியா வெற்றியை பெற்றது.
  • வரலாற்று சாதனைப் படைத்த தமிழக செஸ் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜுன் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதேபோன்று மற்றொரு இந்திய வீரரான விதித் போட்டியில் டிரா செய்தார். இதன் மூலம் 11-வது பிரிவில் 3.5-05 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

இதே போன்று, மகளிர் பிரிவில் அசர்பைஜான் அணியை 3.5 க்கு 0.5 என்ற கணக்கில் இந்தியா வெற்றியை பெற்றது. இதன் மூலம் மகளிர் பிரிவில் 19/ 22 போட்டி புள்ளிகளை கைப்பற்றி இந்திய மகளிர் அணியும் தங்க பதக்கத்தை வென்றது. இதே போன்று இந்திய வீரர்கள் முகேஷ், அர்ஜுன் திவ்யா மற்றும் வந்திகா ஆகியோர் தனி நபர் பிரிவில் தங்கத்தை கைப்பற்றினர். வரலாற்று சாதனைப் படைத்த தமிழக செஸ் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News