செய்திகள்

திருவண்ணாமலை அருகே தச்சு தொழிலாளி வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

Published On 2017-05-21 16:25 GMT   |   Update On 2017-05-21 16:26 GMT
திருவண்ணாமலை அருகே தச்சு தொழிலாளி வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை போனது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே உள்ள வேங்கிக்கால் மண்ணம்மாள் நகரை சேர்ந்தவர் பாரதி குமார். தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (வயது 25). பாரதிகுமார் சம்பவத்தன்று வேலைக்கு சென்றிருந்தார். அவரது மனைவி, காணா கவுண்டர் புதூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.

இதனால் அவர்களது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதை அறிந்த கொள்ளையர்கள், கதவை திறந்து வீட்டுக்குள் புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுப்பற்றி, திருவண்ணாமலை கிழக்கு போலீசில் ரேவதி புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News