என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewellery"

    • 145 பவுன் நகையை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • இதையடுத்து அவரை அங்கு அழைத்துச் சென்ற போலீசார், தீபக் காட்டிய இடத்தில் தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு 27 பவுன் நகைகள் இருந்தது.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பிரபல நகை கடைகள் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தவர் தீபக் (வயது 28). இவர் அந்த கடையிலிருந்து 145 பவுன் நகையை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பின்னர் ஊழியர் தீபக்கை இன்ஸ்பெக்டர் ஆனந்த 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார். அப்போது, திருடிய நகைகளை வங்கிகளில் அடகு வைத்த தீபக், அந்த பணத்தை கொண்டு ஆன்லைன் கிரிக்கெட் விளையாடியது தெரியவந்தது. மேலும் 44 பவுன் நகையை வங்கியில் அடகு வைத்ததற்கான ரசீதுகளையும் அவர் கொடுத்தார். அந்த நகைகளை நீதிமன்றம் மூலமாக மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதே நேரத்தில் திருடிய நகைகளை அல்லிக்குட்டை பகுதியில் உள்ள பச்சாயி அம்மன் கோவில் பகுதியில் புதைத்து வைத்திருப்பதாகவும் தீபக் போலீசாரிடம் கூறினார்.

    இதையடுத்து அவரை அங்கு அழைத்துச் சென்ற போலீசார், தீபக் காட்டிய இடத்தில் தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு 27 பவுன் நகைகள் இருந்தது. அதனை போலீசார் மீட்டனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மூத்த பெண் வாணிஸ்ரீக்கு கும்பகோணத்தில் திருமண ஆகி, விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
    • கணவரிடம் விசாரித்தபோது, அவரும் கடந்த 3 தினங்களாக வீட்டுக்கு வரவில்லை.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி குப்புசெட்டி ச்சாவடி தெருவை சேர்ந்த வர் முருகேசன். கூலி வேலை செய்துவரும் இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண் வாணிஸ்ரீக்கு கும்பகோணத்தில் திருமண ஆகி, விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இதனால், வாணிஸ்ரீ, தாய் வீட்டுக்கு வந்துள்ளார். தாய் வீட்டு பீரோவில், தனது தாலி செயின், நெக்லஸ், தங்ககாசு உள்ளிட்ட சுமார் 6.50 பவுன் தங்க நகைகளை வைத்திருந்தார். சம்பவத்தன்று , சீதாலட்சுமி வீட்டை பூட்டி சாவியை தனது கணவர்வசம் ஒப்படைத்துவிட்டு, காரைக்கால் அருகே அம்பகரத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு வந்து, கணவரிடம், சாவியை வாங்கி வீட்டை திறந்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6.50 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் திருட்டு போய் இருப்பததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கணவரிடம் விசாரித்தபோது, அவரும் கடந்த 3 தினங்களாக வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து, சீதாலட்சுமி கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, தங்க நகைகளை திருடிசென்ற மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

    • சேலம் சூரமங்கலம் சின்னமோட்டூர் பகுதியில் கூலி தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை.
    • உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.25,000, 2 1/2 பவுன் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் சின்னமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி ரத்தினாம்பாள் (வயது 47). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் மாலை வீடு திரும்பியபோது, முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.25,000, 2 1/2 பவுன் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ரத்தினாம்பாள் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டார்.
    • இந்த கொலையில் சம்பந்தப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்தவர் சரவணபாண்டியன் (43). காவலாளியாக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த குருவம்மாள்(54) என்பவரை நகைக்காக கொலை செய்தார். சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணபாண்டியனை கைது செய்தனர்.

    வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றவாளி சரவணபாண்டியனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.14 ஆயிரம் விதித்து உத்தரவிட்டார்.

    • விருதுநகரில் நகை சீட்டு நடத்தி ரூ.43 லட்சம் மோசடி செய்த 2 பேர் மதுரை கோர்ட்டில் அடைக்கப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பவுன்ராஜ், முத்துமாரி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த கருப்பசாமி உள்ளிட்ட சிலர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நகை சீட்டு நடத்தி ரூ. 43 லட்சம் மோசடி செய்ததாக நகைக்கடை அதிபர் பாலாஜி வரதராஜன் மற்றும் பால விக்னேஷ், பாவாளி பவுன்ராஜ், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், சுப்பிரமணியன் மனைவி முத்துமாரி ஆகியோர் மீது புகார் கொடுத்திருந்தனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பவுன்ராஜ், முத்துமாரி ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பாலாஜி வரதராஜன் உள்ளிட்ட 3 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரை மாவட்ட 5-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பால விக்னேஷ், கார்த்திகேயன் ஆகியோர் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • சாரதா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
    • செயின் பறிப்பில் ஈடுபட்டது குலசேகரபட்டினத்தை சேர்ந்த பரத் என்பது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியை சேர்ந்தவர் சித்திரைபாபு. இவரது மனைவி சாரதா (வயது39). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    செயின் பறிப்பு

    நேற்று இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டி ருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு வாலிபர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சாரதா கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். எனினும் அவர் தப்பிச் சென்றுவிட்டார். இதுதொடர்பாக அவர் தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கைது

    இந்நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், தனிப்படை போலீ சார் மாணிக்கம், சாமுவேல், திருமணி, செந்தில், மகாலிங்கம் உள்ளிட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் செயின் பறிப்பில் ஈடுபட்டது குலசேகரபட்டினத்தை சேர்ந்த பரத்(வயது 20) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர் மீது ஏராளமான வழிப்பறி புகார்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

    • கொள்ளை கும்பல் புதுக்கோட்டை பகுதியில் சென்ற போது விபத்தில் சிக்கினர்.
    • கொள்ளையடிக்கப்பட்ட நகையில் பெரும் பகுதியுடன் சம்சுதீன் நாகர்கோவில் தப்பியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    நெல்லை:

    பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள ஜான்சி நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 44). தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

    50 பவுன் கொள்ளை

    இவரது மனைவி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராமசாமி குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் திடீரென புகுந்து பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி அவர்களை கட்டிப்போட்டனர்.

    பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த 20 லட்சம் மதிப்பிலான 50 பவுன் தங்க நகைகள், செல்போன்கள், பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர்.

    விபத்தில் சிக்கினர்

    தகவல் அறிந்ததும் நெல்லை, தூத்துக்குடி போலீசார் உஷார் படுத்தப் பட்டனர். இதற் கிடையே மோட்டார் சைக்கிளில் தப்பிய கும்பல் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் சென்ற போது விபத்தில் சிக்கினர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரை மீட்டு அப்பகுதியினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே உள்ள சோரீஸ்புரம் மாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்து, ராஜீவ் நகரை சேர்ந்த கண்ணன் (20), பாரதி நகரை சேர்ந்த கிஷோர் டேனியல் (20) என்பது தெரிய வந்தது.

    அவர்களிடம் தூத்துக்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் 3 பேரும் தங்களது நண்பர்களான தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்த சிலுவை மற்றும் நாகர்கோவிலை சேர்ந்த சம்சுதீன் ஆகியோருடன் சேர்ந்து பாளையில் கண்டக்டர் ராமசாமி வீட்டில் கொள்ளை யடித்தது தெரிய வந்தது.

    கைது

    இதில் முத்து படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கண்ணன், கிஷோர் டேனியல் ஆகியோரை கைது செய்த போலீசார் சிலுவையையும் நேற்று மடக்கி பிடித்து கைது செய்தனர். 3 பேரும் தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    போலீஸ் தீவிரம்

    இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகையில் பெரும் பகுதியுடன் சம்சுதீன் நாகர்கோவில் தப்பிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் நாகர்கோவில் விரைந்துள்ளனர்.

    சம்சுதீனை பிடித்தால் தான் நகை எங்கு உள்ளது, வேறு யாருக்கேனும் இந்த கொள்ளையில் தொடர்பு உள்ளதா? என்பது தெரிய வரும். எனவே அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • அரிசிபாளையத்தில் நேற்று காலை இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றனர். இந்நிலையில் மாலை வீட்டுக்கு வந்த பழனி, வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் ரொக்கம், 1 1/2 கிராம் தங்க நகைகள், பூஜை அறையில் உண்டியல்களில் இருந்த சுமார் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் சையத் கபூர் தெருவை சேர்ந்தவர் பரணி என்கிற பழனி (வயது 45). இவர் தம்மண்ணன் ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றனர்.

    இந்நிலையில் மாலை வீட்டுக்கு வந்த பழனி, வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் அனைத்தும் கலைந்து கிடந்தது.

    மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் ரொக்கம், 1 1/2 கிராம் தங்க நகைகள், பூஜை அறையில் உண்டியல்களில் இருந்த சுமார் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பழனி உடனடியாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதே போல் அரிசிபாளையம் நாராயணசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளி தொழிலாளி சக்திவேல் (45) என்பார் வீட்டிலும் நேற்று மதியம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.

    இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். 

    • சென்னையில் இருந்து அரசு போக்குவரத்து பஸ்சில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்தார்.
    • 2 பெண்கள் சூரியகாந்தி பக்கத்தில் அமர்ந்து வந்துள்ளனர்.

    விழுப்புரம்:

    சென்னை பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. அவரது மனைவி சூரியகாந்தி (வயது 68). இவர் சம்பவத்தன்று அதிகாலை சென்னையில் இருந்து அரசு போக்குவரத்து பஸ்சில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்தார். அப்போது மேல்மரு வத்தூர் பஸ் நிறுத்தத்தில் 3 பெண்கள் பஸ்சில் ஏறினர். அதில் 2 பெண்கள் சூரியகாந்தி பக்கத்தில் அமர்ந்து வந்துள்ளனர். அவர்கள் செஞ்சி வரும் வரை அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

    நாட்டார்மங்கலம் வரும்போது 3 பெண்களும் இறங்கிவிட்டனர். பின்னர் பார்த்தபோது சூரியகாந்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை காணவில்லை. இதனை ஓடும் பஸ்சில் 3 பெண்களும் தனது தங்க செயினை அபேஸ் செய்து உள்ளதாக சூரியகாந்தி செஞ்சி போலீசில் கொடுத்தார். அதன் பேரில் செஞ்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் வழக்கு பதிவு செய்து பெண்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    • சேலம் லைன்மேடு புது திருச்சி கிளை ரோடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்து சென்றனர்.
    • உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 1/2 பவுன் தங்க நகைகள், ரூ.5000 ரொக்கம் மற்றும் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் லைன்மேடு புது திருச்சி கிளை ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி அந்தோணியம்மாள் (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

    நேற்று மாலை 6 மணி அளவில், வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 1/2 பவுன் தங்க நகைகள், ரூ.5000 ரொக்கம் மற்றும் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அந்தோணியம்மாள் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் யாரும் இல்லை.
    • வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிமணிகள் கலைந்து கிடந்துள்ளன.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நடேசன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஈஸ்வரமூர்த்தி (வயது 35). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் 2-ந் தேதி இரவு இவரது தாயார் சீதாலட்சுமிக்கு கரூரில் உள்ள பல் மருத்துவமனையில் பல் அறுவை சிகிச்சை நடந்ததால் கரூர் சென்று விட்டார்.ஈஸ்வரமூர்த்தியின் மனைவி சத்திய பிரியங்கா அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லை.

    நேற்று காலை ஈஸ்வரமூர்த்தி வீட்டின் அருகில் வேலை செய்யும் எலக்ட்ரீஷியன்கள், ஈஸ்வரமூர்த்தி வீட்டை பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிமணிகள் கலைந்து கிடந்துள்ளன. இதுகுறித்து எலக்ட்ரீஷியன்கள் ஈஸ்வரமூர்த்திக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த துணிமணிகள் கலைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் மற்றும் செயின், தோடு, கொடி, மோதிரம் ஆகியவை சேர்த்து மொத்தம் 20 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்றார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கொண்டி ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் (வயது 38) வியாபாரி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்றார்.

    இந்த நிலையில் கோவிலில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×