செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே அக்காள் உள்பட 2 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

Published On 2017-09-15 16:37 GMT   |   Update On 2017-09-15 16:37 GMT
குடிபோதையில் அக்காள் உள்பட 2 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த சாப்ராங்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திம்மப்பா (வயது 60).இவருக்கு முருகம்மாள்(24) என்ற மகளும், வெங்கடேசன் (20) என்ற மகனும் உள்ளனர்.முருகம்மாளுக்கு திருமணமாகி மஞ்சுநாத் என்ற கணவர் உள்ளார்.

சம்பவத்தன்று குடிபோதையில் வந்த வெங்கடேசன் தனது தந்தையை தாக்கினார்.

இதை அவரது அக்காள் முருகம்மாளும். அக்காளின் கணவர் மஞ்சுநாத்தும் தட்டிக்கேட்டனர். அப்போது அவர்கள் இருவரையும் வெங்கடேசன் அரிவாளால் வெட்டினார். மஞ்சுநாத் தர்மபுரி அரசு மருத்துவமனையிலும், முருகம்மாள் சேலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வழக்குபதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தார்.

Tags:    

Similar News