செய்திகள்

அவனியாபுரம் பகுதியில் ஆழ்குழாய் கிணறுகளில் ரூ.1 லட்சம் மதிப்பிலான கேபிள் வயர்கள் திருட்டு

Published On 2017-09-28 12:17 GMT   |   Update On 2017-09-28 12:17 GMT
அவனியாபுரம் பகுதியில் ஆழ்குழாய் கிணறுகளில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான கேபிள் வயர்களை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை புது மீனாட்சிநகர், தமிழன் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய் காந்தி, மதுரை மாநகராட்சி காண்டிராக்டர் பன்னீர் செல்வத்திடம் மேற்பார் வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

சஞ்சய்காந்தி அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

மதுரை மாநகராட்சி மூலம் அவனியாபுரம் அருகே உள்ள சின்ன உடைப்பு கண்மாய் பகுதியில் 15 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு மாநகராட்சிக்கு தண்ணீர் எடுத்து வந்தோம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஆழ்குழாய் கிணறுகளை பார்வையிட சென்ற போது ஆழ்குழாய் கிணறுகளில் போடப்பட்டு இருந்த கேபிள் வயர்களை காணவில்லை.அந்த வயர்கள் அறுத்து எடுக்கப்பட்டு இருந்தது. நானும் பல இடங்களில் தேடியும் துப்பு கிடைக்க வில்லை. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும். திருடப்பட்ட இந்த கேபிள் வயர்களை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சஞ்சய்காந்தி கூறி உள்ளார்.

இந்த புகார் மனு குறித்து அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News