செய்திகள்

தேனி அருகே பிளஸ்-2 மாணவி உள்பட 2 இளம்பெண்கள் மாயம்

Published On 2018-06-11 10:04 GMT   |   Update On 2018-06-11 10:04 GMT
தேனி அருகே 2 இளம் பெண்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேனி:

தேனி அரண்மனைப்புதூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பார்வதி (வயது 21). பிளஸ்-2 முடித்து விட்டு கடந்த 3 மாதமாக பழனிச்செட்டிபட்டியில் தையல் பயிற்சிக்கு சென்று கொண்டு இருந்தார்.

சம்பவத்தன்று பயிற்சிக்கு செல்வதாக கூறிச் சென்ற பார்வதி இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் அக்கம் பக்கம் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் பழனிச்செட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

தேனி அருகே பண்ணைத் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் பிரியங்கா (17). பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று ராஜாவும் அவரது மனைவியும் வீரபாண்டியில் உளள உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றிருந்தனர். வீட்டில் தனியாக இருந்த பிரியங்கா மாயமானார்.

திருமணம் முடிந்து வந்த ராஜா மகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகார் மனுவில் தனது மகளை ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சுகுமார் (வயது 25) என்பவர்தான் கடத்தியிருக்க கூடும் என்று தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பார்வதி, பிரியங்காவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News