செய்திகள் (Tamil News)

ஆதம்பாக்கத்தில் 2 கடைகளில் கொள்ளை

Published On 2018-07-05 10:19 GMT   |   Update On 2018-07-05 10:19 GMT
ஆதம்பாக்கம் பகுதியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஆதம்பாக்கம்:

ஆதம்பாக்கம் பகுதியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

ஆதம்பாக்கம் கக்கன் நகர் 5-வது தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் முருகேசன். இவர் காலையில் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ. 20ஆயிரம் கொள்ளைபோய் இருப்பது தெரிந்தது. அதேபகுதி கக்கன் நகர் மெயின் ரோட்டில் டீ கடை நடத்தி வருபவர் ஜெய்குமார். நேற்று காலை டீ கடை உடைக்கப்பட்டு சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்கள் திருடு போயிருந்தன.

இதேப்போல் சாஸ்திரி நகர் 3-வது தெருவில் ஆண்கள் விடுதியில் 8 செல்போன்கள் திருடப்பட்டிருந்தது. மேலும் சாஸ்திரி நகர் மாநகராட்சி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த காரிலிருத்து வெண்கலம் கம்பி மற்றும் ஆட்டோவிலிருந்து பேட்டரிகள் திருடப்பட்டிருப்பதாக ஆதம்பாக்கம் போலிசில் புகார் அளித்துள்ளனர்.

ஆதம்பாக்கத்தில் தொடர்ந்து வீடு மற்றும் கடைகளை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், புகார் கொடுக்க செல்லும் போது தங்களை அலைக்கழிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
Tags:    

Similar News