செய்திகள் (Tamil News)
தேனி அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்
தேனி அருகே கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பழனி செட்டிபட்டி அரசுநகர் பகுதியை சேர்ந்தவர் முகமதுரபீக். இவரது மனைவி ரசீதாபானு(வயது24). இவர்களுக்கு சுப்ரீம்ரியா என்ற ஒருவயது பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் கோவித்துக் கொண்டு கைக்குழந்தையுடன் ரசீதாபானு வீட்டைவிட்டு வெளியேறினார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.