தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவை ரத்து

Published On 2024-09-21 22:20 GMT   |   Update On 2024-09-21 22:20 GMT
  • பராமரிப்புப் பணிகள் காரணமாக ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
  • பயணிகள் வசதிக்காக கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

சென்னை:

சென்னையில் பொது போக்குவரத்தில் மின்சார ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் ஏராளமான மக்கள் இந்த மின்சார ரெயில் சேவையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்வோர் என இந்த ரெயில் சேவையை நம்பியுள்ளனர்.

இதற்கிடையே, பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில் சேவை அவ்வப்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் முழுவதுமாக அல்லது பகுதியாக ரத்து செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில், தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில் சேவையில் இன்று (செப்டம்பர் 22ம் தேதி) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை தாம்பரம்-கடற்கரை வரையிலான மின்சார ரெயில் சேவை இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News