செய்திகள்

ஆர்.எஸ்.புரத்தில் ரூ.50 லட்சம் கேட்டு பூ வியாபாரியை கடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது

Published On 2018-07-26 12:27 GMT   |   Update On 2018-07-26 12:27 GMT
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த பூ வியாபாரியை ரூ.50 லட்சம் கேட்டு கடத்திய வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த பூ வியாபாரி விஷ்ணு ராஜ்(வயது 38) என்பவரை கடந்த மாதம் 30-ந் தேதி ஒரு கும்பல் காரில் கடத்தியது.

பின்னர் அவரது தந்தை கோவிந்தராஜூக்கு போன் செய்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கடத்தல் கும்பல் விஷ்ணுராஜை திருச்சி-மதுரை பைபாஸ் சாலையில் தள்ளி விட்டு விட்டு தப்பிச் சென்றனர். போலீசார் திருச்சி சென்று விஷ்ணுராஜை மீட்டனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் கோவை நல்லாம் பாளையத்தை சேர்ந்த தினகரன் (33), தடாகம் ரோட்டை சேர்ந்த பிரபு(28), சந்தோஷ் (22), உக்கடத்தை சேர்ந்த சதாம் உசேன் (23), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஹரி பிரசாத் (20), ராஜவீதியை சேர்ந்த அரவிந்த்(23), இடையர் வீதியை சேர்ந்த நாகராஜ்(26) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த மணிகண்டன், மதுரையை சேர்ந்த சூரிய பிரபு, ராஜேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News