செய்திகள் (Tamil News)

மார்த்தாண்டம் அருகே இளம்பெண் மாயம்

Published On 2018-08-02 13:22 GMT   |   Update On 2018-08-02 13:22 GMT
மார்த்தாண்டம் அருகே வீட்டில் இருந்து வெளியில் சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

மார்த்தாண்டம் விரிகோடு கோணம் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவரது மகள் லிட்டில் பிளவர் (வயது24).

இவர் கடந்த மாதம் 14-ந்தேதி இவர் வீட்டில் இருந்து நாகர்கோவிலுக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பெற்றோர் பல இடங்களில் தேடினர். இந்த நிலையில் லிட்டில் பிளவர் தனது தம்பியின் செல்போனுக்கு ஒரு குறுந்செய்தி அனுப்பினார். அதில் என்னை யாரும் தேட வேண்டாம் என அனுப்பி இருந்தார்.

இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு, தோழிகள் வீடுகளில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரபிள்ளை மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News