செய்திகள் (Tamil News)

திருச்சியில் தனியார் நிறுவன பெண் ஊழியர் மாயம்

Published On 2018-08-05 16:48 GMT   |   Update On 2018-08-05 16:48 GMT
தனியார் நிறுவன பெண் ஊழியர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி:

திருச்சி-சென்னை பைபாஸ் ரோடு செந்தண்ணீர்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜசேகர்-விமலா தம்பதியினர். இவர்களுக்கு பிரியதர்ஷிணி (வயது 21) என்ற மகள் உள்ளார். இவர் திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள தனியார் பைக் விற்பனையகத்தில் பணி புரிந்து வந்தார். இதற்காக தினமும் பேருந்தில் வந்து செல்வது வழக்கம். 

சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டபோதும் எந்த தகவலும் கிடைக்கவில்லையாம்.
இதனால் உறவினர்கள் நண்பர்களிடம் விசாரித்தும் பிரியதர்ஷிணி குறித்த தகவல் இல்லாததால் பொன்மலை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். 

அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், அவர் தானாக எங்கும் சென்றாரா? அல்லது மர்ம நபர்கள் எவரேனும் அவரை கடத்தி சென்றனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News