செய்திகள்

கஜா புயல் பாதிப்பு: ‘கார்காவயல்’ கிராமத்தை நடிகர் விஷால் தத்தெடுத்தார்

Published On 2018-11-25 06:39 GMT   |   Update On 2018-11-25 07:07 GMT
தமிழகத்தை சின்னா பின்னமாக்கிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தத்தெடுத்து மீண்டும், அந்த கிராமத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவேன் என்று உறுதி அளித்துள்ளார். #Gaja #Vishal
கஜா புயலால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். நடிகர், நடிகைகளும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சங்கத்தின் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகருமான விஷால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தொகுதியிலுள்ள என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இதையடுத்து, மீண்டும், அந்த கிராமத்தை நான் பழைய நிலைக்கு கொண்டு வருவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும், நாட்டின் சிறந்த கிராமமாகவும் இந்த கார்காவயலை மாற்றுவேன் என்றும் கூறியுள்ளார். அந்த கிராமத்திற்கு அவர் நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளார்.

கார்காவயல் கிராமத்தை விஷால் தத்தெடுத்ததைத் தொடர்ந்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:- கஜா புயலால் கார்காவயல் கிராமம் பெரும் சேதத்தை சந்தித்து உள்ளது.

கும்பிட்டு ஓட்டு கேட்டு வந்த அரசியல்வாதிகள் யாரும் எங்களது கிராமத்துக்கு வரவில்லை. இப்போது நாங்கள் கும்பிடுகிறோம். கும்பிடாமல் வந்தது விஷால். இது அவருடைய கிராமம். இனி எத்தனை ஆண்டு காலம் இருந்தாலும், இந்த உதவியை நாங்களும் மறக்கமாட்டோம். அரசியலை நம்பி நாங்கள் வாழமாட்டோம் என்று தெரிவித்தனர்.
Tags:    

Similar News