செய்திகள்
தற்கொலை

புதுவை அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-08-27 10:20 GMT   |   Update On 2019-08-27 10:20 GMT
புதுவை அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை உழந்தைகீரப்பாளையம் புவன்கரே வீதியை சேர்ந்த தேவலிங்கம். இவரது மனைவி சிவபாக்கியம். இவர்களது மகன் வேல்முருகன் (வயது35), பெயிண்டர். இவர் புதுவை டி.வி.நகர் துலுக்காணத்தமன் கோவில் தெருவில்தற்போது வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை.

திருமணம் செய்து வைக்கும்படி வேல்முருகன் தனது தாய் சிவபாக்கியத்திடம் வலியுறுத்தி வந்தார். ஆனால் சிவபாக்கியம் இதற்கான முயற்சிகள் எடுத்தும் திருமணம் கைகூடாததால் சோகத்தில் வேல்முருகன் மதுகுடித்து வந்தார்.

இந்த நிலையில் திருமண ஏக்கத்தில் மனமுடைந்த வேல்முருகன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். நேற்று அவர் தங்கி இருந்த வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது தாய் சிவபாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News