செய்திகள்
மரணம்

ரெயில் மோதி ஒருவர் பலி

Published On 2021-02-16 11:41 GMT   |   Update On 2021-02-16 11:41 GMT
ரெயில் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி (வயது 45). தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் திருப்பரங்குன்றம் என்ஜினீயரிங் கல்லூரி பகுதிக்கு செல்லக்கூடிய ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News