செய்திகள்
விபத்து பலி

புதுச்சத்திரம் அருகே தனியார் நிறுவன மேலாளர் விபத்தில் பலி

Published On 2021-02-16 13:39 GMT   |   Update On 2021-02-16 13:39 GMT
புதுச்சத்திரம் அருகே விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:

விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சேர்ந்தவர் கோகுல்குமார் (வயது 24).இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் துணி தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கோகுல்குமார் அவரது சொந்த ஊரில் இருந்து கரூருக்கு காரில் சென்றார்‌. புதுச்சத்திரம் அடுத்த ஏ.கே.சமுத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது கார், எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த தடுப்பு கற்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் கோகுல்நாத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்திற்கான காரணம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News