என் மலர்
நீங்கள் தேடியது "accident death"
- அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற தன்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ராசி குமரிபாளையம் காந்தமலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (29). இவரது மனைவி தன்யா (25), இவரது மாமியார் கோகிலா (45). இவர்கள் 3 பேரும் நேற்றிரவு மோகனூரில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
இதேபோல் அணியாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே உள்ள பிள்ள விடுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (19), கள்ளக்குறிச்சி மாவட்டம் கொசப்பாடி பகுதியை சேர்ந்த இளவரசன் (18) ஆகிய 2 பேர் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நாமக்கல்-மோகனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை பாலகிருஷ்ணன் ஓட்டி வந்தார். அவருக்கு பின்னால் இளவரசன் அமர்ந்திருந்தார்.
இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நாமக்கல்-மோகனூர் சாலையில் எதிர் எதிரே சென்றபோது நேருக்கு நேர் மோதி விபத்தானது. இதில் நவீன், தன்யா, கோகிலா ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தனர். இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தன்யாவை சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், நவீனை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், கோகிலாவை அங்கிருந்து மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
அதேபோல் இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் பாலகிருஷ்ணன், இளவரசன் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இளவரசனை சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற தன்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நவீன் மற்றும் அவரது மாமியார் கோகிலா ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே கொள்ளிடம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ரங்கநாதன் மகன் புவனேஷ் (வயது23). இவரது நண்பர் சிதம்பரம் கவரப்பட்டு வீரன் கோவில் திட்டு பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் செல்வம் (20).
இவர்கள் 2 பேரும் புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் புவனேஷ் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வேகமாக வந்த லாரி மோதியது.
இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த புவனேஷ் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூருக்கு சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி திடீரென ராஜவேலு மீது மோதியது.
- போலீசார் ராஜவேலுவின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த மாகரல், பெரிய காலனியை சேர்ந்தவர் ராஜவேலு (வயது64). இவர் இன்று காலை வீட்டில் இருந்து மெயின் ரோட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூருக்கு சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி திடீரென ராஜவேலு மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜவேலு உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.
தகவல் அறிந்ததும் மாகரல் போலீசார் ராஜவேலுவின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மகாராஷ்டிராவில் அரசு பஸ்சும்- கண்டெய்னர் லாரியும் மோதி கொண்டன.
- காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டம் மும்பை நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அரசு பஸ்சும்- கண்டெய்னர் லாரியும் மோதி கொண்டன. இந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள்.
10 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- விபத்தில் காரில் இருந்த 8 மாத கைக்குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தது.
- விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணகுடி:
வள்ளியூர் அருகே உள்ள பண்டாரகுளத்தை சேர்ந்தவர் பால்ராஜ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மரியவசந்தி (வயது52). இவர்கள் 2 பேரும் நேற்றிரவு பண்டாரகுளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பணகுடியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அப்போது முத்துச்சாமி புரம் அருகே நான்கு வழிச்சாலை பாலத்தில் அவர்கள் சென்ற போது அவர்களது பின்னால் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அந்த காரின் முன்பக்க டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த மரியவசந்தி தூக்கி வீசப்பட்டு பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பால்ராஜிக்கு கால் முறிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த 8 மாத கைக்குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தது. அந்த குழந்தையை தனியார் ஆஸ்பத்திரியிலும், பால்ராஜ் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கூலித்தொழிலாளி கண்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மகன் கண்ணன் (40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையாக காஞ்சிபுரம் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பாலாறு மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வேகமாக வந்த ஆம்னி வேன் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கூலித்தொழிலாளி கண்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் ஆம்னி வேனில் முன் பகுதி முழுவதும் நசுங்கிய நிலையில் வேனை ஓட்டி வந்த பெருமாள் வேனில் சிக்கி உயிருக்கு போராடினார். உடனடியாக அருகில் இருந்த கிராம மக்கள் விரைந்து வந்து, கடப்பாரை கொண்டு ஆம்னி வேன் முன் பக்கத்தை நெம்பி படுகாயம் அடைந்த வேன் டிரைவர் பெருமாளை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- விபத்தில் லாரியின் பின்புறம் அமர்ந்து சென்ற தொழிலாளர்கள் மீது கட்டுமான கற்கள் விழுந்தது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், மாச்சர்லாவில் இருந்து கட்டுமான பணிக்கு தேவைப்படும் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ரேப்பள்ளி நோக்கி சென்று கொண்டு இருந்தது.
ரவி அனந்தபுரம் என்ற இடத்தில் சென்றபோது, லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியின் பின்புறம் அமர்ந்து சென்ற தொழிலாளர்கள் மீது கட்டுமான கற்கள் விழுந்தது.
இதில் கற்களுக்கு அடியில் சிக்கி சிந்தர்லா பாசர்ல பாடு பகுதியை சேர்ந்த சென்ன கேசவல்லு (வயது 48), சாம்பைய்யா (60), வாலி (41) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் டிரைவர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ரேப் பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்த ரமேஷ், தம்பிரான் ஆகிய 2பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரை வரை தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர், மசூதி தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது45). இறைச்சி கடை வைத்து உள்ளார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த தம்பிரான் (61) என்பவர் வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டு இருந்தனர். செங்கல்பட்டு அருேக பழவேலி வந்போது, திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த ரமேஷ், தம்பிரான் ஆகிய 2பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
பலத்த காயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய தம்பிரானை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தம்பிரானும் இறந்து போனார்.
விபத்து நடந்ததும் கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.இது குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரை வரை தேடி வருகின்றனர்.
- தடுப்பு வேலி இருப்பதை அறியாமல் வளைவில் திரும்பும் போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த புதுப்பட்டு கூட்டுச்சாலையில் கடந்த 24-ந் தேதி இரவு காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் வாரச்சந்தையை முடித்துக் கொண்டு அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதிைய சேர்ந்த கூலி தொழிலாளிகள் 5 பெண்கள் உட்பட 7 பேர் ஒரே ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். புதுப்பட்டு அருகே வந்த போது தடுப்பு வேலி இருப்பதை அறியாமல் வளைவில் திரும்பும் போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிவகாமி, தேவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலத்த காயம் அடைந்த பூங்கொடி(50) அரசு ஆஸ் பத்திரியிலும் கஜலட்சுமி (55) சென்னை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பூங்கொடி, கஜலட்சுமி ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் கவலைக்கிடமான நிலையில் கலைவாணி, செல்வம், மனோகரன் உட்பட 4 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சாலை விபத்தில் தாத்தா, பேரன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
தூத்துக்குடி தனியார் ரசாயன நிறுவனத்தில் இருந்து இன்று காலை 8.30 மணி அளவில் டாரஸ் லாரி ஒன்று ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் பேப்பர் மில்லுக்கு சுண்ணாம்பு கல் பாரம் ஏற்றிக் கொண்டு வந்தது. அந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வாரமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபு (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த லாரி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பெத்தான்கோட்டை பிரிவு அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது அதே திசையில் மொபட்டில் முன்னால் சென்றவர் திடீரென பெத்தான் கோட்டை வலது பகுதியில் திரும்பினார். இதனால் எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த மொபட் மீது டாரஸ் லாரி மோதியது. இதில் மொபட் சுக்குநூறாக நொறுங்கியது.
இந்த விபத்தில் மொபட்டை ஓட்டி வந்த பெத்தான்கோட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் (80) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மொபட்டில் பின்னால் அமர்ந்திருந்த அவரது பேரன் கார்த்தி (14) என்பவர் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் தாத்தா, பேரன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பிரேக்கில் ஏற்பட்ட பலுதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.
- வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
திண்டிவனத்திலிருந்து நெய்வேலி நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று காலை வந்தது. இந்த பஸ்சை திண்டிவனம் அருகே சித்தனி பகுதியை சேர்ந்த சபரிநாதன் (வயது 31) டிரைவர் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் 30-க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிகொண்டு சென்னை-கும்பகோணம் சாலையில் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி என்ற இடத்தில் பஸ் வந்தபோது பஸ் எதிரே மோட்டார் சைக்கிள், கார் வந்தது. அப்போது பஸ்சை மோட்டார் சைக்கிள், கார் மீது மோதாமல் இருக்க பஸ்சின் டிரைவர் சபரிநாதன் சடன் பிரேக் போட்டுள்ளார்.
அப்போது பிரேக்கில் ஏற்பட்ட பலுதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது, பஸ்சின் கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். மேலும் 30 பயணிகள் காயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து சாலை விபத்தில் காயமடைந்த பயணிகளை அமைச்சர் பொன்முடிடி நேரில் சென்று பார்வையிட்டார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அந்த பகுதியில் பரபரபாக உள்ளது.
- கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பில் மோதியது.
- விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது64). இவரது மகன் பிரகாஷ். இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தவாசியில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்று இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை தந்தை-மகன் இருவரும் வந்தவாசியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
கோவூர் அருகே தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பில் மோதியது.இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த செல்வராஜிம், அவரது மகன் பிரகாசும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே மகன் கண்முன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார்.
அவரது மகன் பிரகாஷ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து பலியான செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான செல்வராஜின் மகள் தீபா என்பவர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர் விபத்து நடந்த இடத்திற்கு வந்து தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இந்த விபத்தால் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.