உள்ளூர் செய்திகள் (District)

ஊத்துக்கோட்டை அருகே 33 வயது போலீஸ்காரர் மாரடைப்பால் 'திடீர்' மரணம்

Published On 2023-05-02 08:23 GMT   |   Update On 2023-05-02 08:23 GMT
  • உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
  • பென்னாலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 33). போலீஸ்காரரான இவர் ஊத்துக்கோட்டையில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மதியழகி. இவர்களுக்கு தனுஸ்ரீ, மிதுனா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் இருந்த போலீஸ்காரர் ஏகாம்பரத்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே போலீஸ்காரர் ஏகாம்பரம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் இறந்து இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இதனை கேட்டு அவரது மனைவி கதறி துடித்தார்.

33 வயதான போலீஸ்காரர் மாரடைப்பால் இறந்து போன சம்பவம் உடன் பணியாற்றும் மற்ற போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News