உள்ளூர் செய்திகள்

கோவையில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலி

Published On 2023-05-17 09:13 GMT   |   Update On 2023-05-17 09:13 GMT
  • இளங்கோ கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
  • இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்த இளங்கோவின் உடலை போலீசார் மீட்டனர்.

கோவை,

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 36). இவர் கோவை பீளமேடு நேரு நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இளங்கோ நேருநகர் ஐானகியம்மாள் நகரில் உள்ள ஒரு வீட்டை இடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இளங்கோ பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்த இளங்கோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இளங்கோவை பணி செய்ய வைத்ததாக கட்டிட உரிமையாளர் வெங்கடேஷ், கட்டிட காண்டிராக்டர் மூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News