எடப்பாடி பழனிசாமி படத்துடன் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் அட்டை: பா.வளர்மதி-கே.பி.கந்தன் வழங்கினார்கள்
- அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
- அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்களுடன் வடிவமைக்கப்பட்டு புதிய அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதற்காக அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்களுடன் வடிவமைக்கப்பட்டு புதிய அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய அட்டைகளை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க சென்னை புறநகர் மாவட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று நடந்தது.'
மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி உறுப்பினர் அட்டைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் கூறும்போது, 'இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்றுள்ள அனைத்து கழக உறுப்பினர்களுக்கும் மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் அட்டை வழங்கப்படுகிறது' என்றார்.