உள்ளூர் செய்திகள்

அலசநத்தம் ஏரி தூர் வாரும் பணி

Published On 2023-01-09 10:06 GMT   |   Update On 2023-01-09 10:06 GMT
  • அலசநத்தம் ஏரி தூர் வாரப்பட்டு, சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
  • மேயர் எஸ்.ஏ. சத்யா ஏரி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

ஓசூர்,

ஓசூர் 2-வது சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் ரூ.23.5 லட்சம் மதிப்பில், ஓசூர் அலசநத்தம் ஏரி தூர் வாரப்பட்டு, சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு, உதவி கலெக்டர் சரண்யா முன்னிலை வகித்தார்.ஓசூர் மக்கள் சங்க தலைவர் சரவணன் வரவேற்றார். மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஏரி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர் ஆஞ்சி, பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் தமிழ்வாணன், மனிதவள மேம்பாட்டு துறை முதுநிலை மேலாளர் பாபு மற்றும் மக்கள் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணாராவ், ராகவன், ஆடிட்டர் மணி, செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News