உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி அமையலாம்-டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2024-06-07 06:08 GMT   |   Update On 2024-06-07 06:08 GMT
  • தேர்தல்களில் வெல்ல கூட்டணி என்பது வியூகம் தான்.
  • தேர்தலில் வியூகம் அமைப்பதில் கோட்டை விட்டோம் என்பது உண்மை.

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதா மற்றும் அ.தி.மு.க.வினரிடையே கடும் அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இரு கட்சி கூட்டணியும் உடையாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்க முடியும் என்ற கருத்து இரு கட்சியினரிடமும் உள்ளது.

அண்ணாமலையின் அணுகுமுறை சரியில்லாத தால் தான் கூட்டணி அமையவில்லை என்று அ.தி.மு.க. குற்றம்சாட்டி உள்ளது.

இதற்கிடையில் அ.தி.மு.க.வை மக்கள் நிராகரித்து விட்டதாக அண்ணாமலை மீண்டும் தெரிவித்து இருப் பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் தென் சென்னை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கி வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

கூட்டணி பலமாக இருந்திருந்தால் வென்று இருப்போம் என்பது யதார்த்தமான உண்மை. தி.மு.க. மீது கடுமையான அதிருப்தி இருந்தும் வெற்றிபெற வழி வகுத்து விட்டோம். எதிரணி பிரியாமல் இருந்திருந்தால் அவர்களால் வென்று இருக்க முடியாது.

தேர்தல்களில் வெல்ல கூட்டணி என்பது வியூகம் தான். அந்த வியூகத்தை உடைக்கவும் முயற்சிப்பார் கள். அதையெல்லாம் வென்று வியூகம் அமைத்தால் வெல்ல முடியும். இந்த தேர்தலில் வியூகம் அமைப்பதில் கோட்டை விட்டோம் என்பது உண்மை.

கட்சி வளர்ந்து இருக்கலாம். சந்தோசம். அதை நினைத்து கொண்டாடுவதா? அல்லது அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வென்றதை நினைத்து வருத்தப்படுவதா?

என்னதான் கட்சி வளர்ந்து இருந்தாலும் தமிழகத்தில் இருந்து நமது பிரதி நிதிகள் யாரும் இல்லை என்பது வருத்தம்தானே. வென்று இருந்தால் மந்திரி பதவிகள் கிடைத்து இருக்கும். அதன் மூலம் மக்கள் பணி மேற்கொண்டிருக்கலாம். அதனால் கட்சி மேலும் வளர்ந்து இருக்கும்.

கூட்டணி வேண்டாம் என்று மறுபடி மறுபடி எதிரணியை வெற்றி பெற வைப்பது சரியான தேர்தல் வியூகம் அல்ல. 2026 தேர்தலை பற்றி இப்போதே பேச வேண்டிய அவசியமில்லை. அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருக்கிறதா? இல்லையா? எதிர்காலத்தில் அமையுமா? என்றெல்லாம் யாரும் கருத்து சொல்ல முடியாது. ஏனெனில் கூட்டணி பற்றி முடிவெடுக்க வேண்டியது தேசிய தலைமைதான்.

தேர்தலில் நான் தோற்றது எதிர்பாராதது. பிரசாரத்தின் போது மக்கள் காட்டிய ஆதரவையும் தி.மு.க. மற்றும் அதன் வேட்பாளர் மீது மக்கள் வெளிப்படுத்திய வெறுப்பையும் நேரடியாக பார்த்தேன்.

தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் பெண்களுக்கான ரூ.1000 உதவித்தொகையை வங்கி கணக்கில் போட்டார்கள். மீனவர்களுக்கான ரூ.8 ஆயிரம் உதவித் தொகையையும் 17-ந்தேதி வங்கி கணக்கில் செலுத்தி இருக்கிறார்கள்.

இன்னும் அதிகமான வாக்குகள் பெற்றிருப்பேன். ஒருவேளை வெல்ல முடியும் என்று நினைத்திருந்தேன்.

இவ்வாறு அவர் கூறி னார்.

Tags:    

Similar News