உள்ளூர் செய்திகள்

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு 50 ஆயிரம் பரிசு

Published On 2023-03-07 07:36 GMT   |   Update On 2023-03-07 07:36 GMT
  • ஒரு வருடமாக நடைபெற்ற போட்டி நிறைவடைந்தது
  • பத்துக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்வி மைதானத்தில்கீழக்குடியிருப்பு KKP-வாரியர்ஸ் அணியினர் நடத்திய தொடர் கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு வருடமாக நடைபெற்று நேற்று நிறைவு பெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டத்திலிருந்து கிரிக்கெட் அணியினர் போட்டியில் கலந்து கொண்டனர். இத்தொடருக்கான முதல் பரிசு வென்ற திருமானூர்-FRESHஅணிக்கு, ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-ம் பரிசினை பொன்பரப்பி-சத்ரியன்பிரதர்ஸ் அணி, 3-ம் பரிசினை சிலால்-DXஅணி, 4-ம் பரிசினை உடையார்பாளையம்-தமிழன்CC அணி பெற்றனர்.இவர்களுக்கு அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் வைத்தி பரிசுகளை வழங்கினார். இத்தொடரானது கடந்த 2022- பொங்கல் அன்று துவங்கப்பட்டது.இந்தப் போட்டிக்கு பரிசுகள் வழங்கிய மாடர்ன் கல்வி குழுமம் எம் ஆர் சுரேஷ், கவுன்சிலர் ரங்கநாதன். எஸ் டி துரை மாதவன் தேவா பரப்பிரம்மம் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமார் உள்ளிட்ட அனைவருக்கும்கபடி குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.

Tags:    

Similar News