உள்ளூர் செய்திகள் (District)

பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2023-07-18 07:35 GMT   |   Update On 2023-07-18 07:35 GMT
  • அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்
  • கீழப்பழுவூர் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்

அரியலூர்,

திருநெல்வேலி நகரம், குன்றுத் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி பேச்சியம்மாள்(30). இவர் தற்போது அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் சுண்ணாம்பு கால்வாய் தெருவிலுள்ள ஒரு வாடகை வீட்டில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.கடந்த 20.5.2023 அன்று இவர்களது 7 வயது மகளை, வீட்டின் உரிமையாளர் ராமசாமி மகன் பரமசிவம் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்தகாவும், இது குறித்து புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிந்தனர்.மேலும், பரமசிவம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேச்சியம்மாள் கடந்த 19.6.2023 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.இந்நிலையில் கடந்த 24.6.2023 அன்று கீழப்பழுவூர் காவல் நிலைய ஆய்வாளர் சகாய அன்பரசு, உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் சிலர், பேச்சியம்மாள் வீட்டுக்குச் சென்றதாகவும், அங்கு அவரிடம் பரமசிவம் மீது கொடுக்கப்பட்ட புகார் மனுவை திரும்ப வேண்டும் என்றும், இல்லையென்றால் உன் மீது பொய் வழக்குப் போட்டு, சிறையில் அடைப்பதாகவும் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இதனால் மன உளைச்சலில் இருந்த பேச்சியம்மாள் திங்கள்கிழமை தனது கைகுழந்தை, கணவர் லட்சுமணனுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸôர் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து பேச்சியம்மாள்,கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த போது போலீஸôர் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி, வலுக்கட்டயமாக வேனில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பேச்சியம்மாளை கடைசி வரை ஆட்சியரை சந்திக்க விடாமல் போலீஸôர் தடுத்தனர். இச்சம்பவம் ஆட்சியர் அலுலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News