உள்ளூர் செய்திகள்

ஆண்டிமடம் அருகே வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2023-05-27 05:54 GMT   |   Update On 2023-05-27 05:54 GMT
  • ஆண்டிமடம் அருகே வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
  • முகாமை எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம் திருக்களப்பூர் ஊராட்சியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன், ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி (வட்டார ஊராட்சி), ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன், ஒன்றிய குழு உறுப்பினர் பத்மநாபன், திருக்களப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியமேரி, ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பம் செல்வமணி, ஊராட்சி செயலாளர் மாயகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி உதயகுமார், கழக முன்னோடி பழனிவேல், கிளைக் கழக செயலாளர்கள் திருநாவுக்கரசு, ராமாமிர்தம், வேணுகோபால், ரங்கநாதன், ஆபிரகாம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News